×

உபி அமைச்சர் பரபரப்பு ஆதிக் அகமது கொலைக்கு எதிர்க்கட்சிகளே காரணம்

சம்பல்: ‘ஆதிக் அகமது மற்றும் அஷ்ரப் அகமது இருவரும் ரகசியங்களை அம்பலப்படுத்தி விடுவார்கள் என்பதால் அவர்களை எதிர்க்கட்சிகள் கொன்று விட்டன’ என உத்தரபிரதேச அமைச்சர் தரம்பால் சிங் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தரம்பால் சிங் நேற்று முன்தினம் சம்பல் பகுதியில் பாஜ தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ‘‘உண்மை என்னவென்றால், ஆதிக் கொலையில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

சில பயங்கரமான ரகசியங்கள் வெளிவரவிருந்தன. அதனால்தான் எதிர்க்கட்சிகள் அவரைக் கொன்று விட்டன’’ என குற்றம் சாட்டி உள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக இரவில் அழைத்து வரப்பட்ட ஆதிக், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் எந்த தடுப்பு நடவடிக்கையிலும் ஈடுபடாமல் அமைதி காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post உபி அமைச்சர் பரபரப்பு ஆதிக் அகமது கொலைக்கு எதிர்க்கட்சிகளே காரணம் appeared first on Dinakaran.

Tags : UP Minister ,Samsonru Adiq Ahmed ,Chambal ,Aadiq Ahmed ,Ashraf Ahmed ,UP ,minister ,Dinakaran ,
× RELATED உ.பி. அமைச்சர் விஜய் காஷ்யப்...